- நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணுறம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டுகோல் கொடுத்தே எங்க உயிரை வாங்குறிங்க?உங்க கிட்ட போனில பேசின காசையெல்லாம் சேர்த்து வைத்திருந்த , நான் லோன் போட்டு பைக் வாங்கியிருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.
- ஒரு பொண்ணு கொடுக்கிற மிஸ்டு கோலை மட்டும் யாராலும் அட்டன்ட் பண்ணவே முடியாது அவ்ளோ சார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகோல் கொடுக்க நீங்க எந்த யூனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்தீங்க?
- அது ஏன் எப்ப பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி..ஹி..ன்னு சிரிச்சுகிட்டே இருக்கிங்க? ஒரு மணி நேரம் உங்க கிட்ட போன்ல பேசின அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க எதாவது பேஸ்ட் விளம்பரத்தில நடிக்கிறதுக்கு எங்ககிட்ட டிரெயினிங் எடுக்கிறிங்களா?
- போன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கிறோம். எதை கேட்டாலும் நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்கன்ன நாங்க என்னத்த சொல்லி தொலைக்கிறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைத்து நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சிடுவம். அதையே மனசில வைச்சிகிட்டு கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும் தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறிங்க?
- மெசேஜ் ல மட்டும் ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்கிறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தை என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன பிரிஜ்ஜிக்கு உள்ள ஒளிச்சு வெச்சுடுவீங்களா என்ன?
- அப்புறம் அப்புறம்”ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறிங்க சரி வைச்சிடுறேன்னு நாங்க போனை கட் பண்ண போகும் போதுதான் என் கூட பேசுறது உங்களுக்கு போரடிக்குதா’ன்னு ஒரு சென்டிமன்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?
- நீங்க கிப்ட் கொடுத்தா மட்டும் விலையப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிப்ட் கீ-செயினாவோ,கர்சீப்பாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்சாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஜம்பது ரூபாய்க்கு கிடைக்கும் ஆனா இதே நாங்க கிப்ட் கொடுக்கும் பொது மட்டும் சுடிதாரோ, செல்போனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைந்தது 3000/=ரூபாய்க்கு செலவு பண்ணினாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவு கோலுக்கு எல்லையே கிடையாதா?
- உன் ஞாபகமாகவே இருந்திச்சு. ராத்திரி எல்லாம் துக்கமே வரல்ல'ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் ஞாபகமாகவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்த கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுன்னு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்தில ஒரு மிஸ்டுகோல் கொடுத்திட்டு மறுநாள் காலையில உனக்கு என் ஞாபகமே இல்லைன்னு சண்டை போட வேண்டியது. இந்த விசயத்தில சத்தியமா உங்களை அடிச்சிக்க ஆளே கிடையாது.
- நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்ன்னு எதிர் பார்க்கிறிங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வைக்கிற குப்பை தொட்டியா?
- நண்பர்களே இந்த கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிருத்திக்குங்க. தப்பி தவறி கூட இந்த கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டிங்கனு வையுங்க அவளவுதான் சோலி முடிஞ்சுது.

No comments:
Post a Comment