புன்னகை
புன்னகை,
மொழிகளால்
நொறுக்கப்படாத
பொது மொழி.
நொறுக்கப்படாத
பொது மொழி.
வார்த்தைகளால்
இறுக்கப்படாத
வாய் மொழி.
இறுக்கப்படாத
வாய் மொழி.
உள்ளத்தின் விதைகள்
உதட்டில் விரிக்கும்
உன்னத மலர் தான்
புன்னகை.
உதட்டில் விரிக்கும்
உன்னத மலர் தான்
புன்னகை.
மகிழ்வின் வாடைக் காற்று
பட்டென்று வரும்
பரவசப் பூ தான் புன்னகை.
பட்டென்று வரும்
பரவசப் பூ தான் புன்னகை.
ஒரு வார்த்தையில்
சொல்லும்
நட்பின் வரலாறு தானே
புன்னகை.
சொல்லும்
நட்பின் வரலாறு தானே
புன்னகை.
விலங்கிலிருந்து மனிதன்
விலகியே இருப்பது
புன்னகையின்
புண்ணியத்தினால் தானே.
விலகியே இருப்பது
புன்னகையின்
புண்ணியத்தினால் தானே.
புன்னகை இல்லாத
சாலைகளில் நடப்பது
நரகத்தின் வாசலில்
தீக்குளிப்பது போன்றதே.
சாலைகளில் நடப்பது
நரகத்தின் வாசலில்
தீக்குளிப்பது போன்றதே.
இரு கை இல்லாதவர்
ஊனமானவரல்ல
புன்ன’கை’ இல்லாதவரே
உள்ளுக்குள் ஊனமானவர்.
ஊனமானவரல்ல
புன்ன’கை’ இல்லாதவரே
உள்ளுக்குள் ஊனமானவர்.
புன்னகை,
ஒரு வரிக் கவிதையாய்
உருவாகட்டும்,
புரட்டிப் படிக்கும்
புத்தகமாகவேண்டாம்.
ஒரு வரிக் கவிதையாய்
உருவாகட்டும்,
புரட்டிப் படிக்கும்
புத்தகமாகவேண்டாம்.
புன்னகைக்க
மறந்தோர்க்கு
ஓர் வேண்டுகோள்.
மறந்தோர்க்கு
ஓர் வேண்டுகோள்.
No comments:
Post a Comment