Labels


பிரிவே !

பிரிவே !
உயிரைக்கேட்டிருந்தால் தந்திருப்பேன்
மாறாக நீ எந்தன் உணர்வை
ஏன் தான் பறித்துச்சென்றாய்?
உன் வார்த்தைகளை நம்பி நானும்
வாழத்தொடங்கினேன் அவை
வாடகைப்பொருள் என்று அறியாததால்
என் நம்பிக்கையை நீ உனக்கு பலமாக்கி
நடத்திவிட்டாய் நாடகத்தை உனதாக்கி
தூரத்தில் இசைஒலி கேட்கும் போதும்
உன் துரோகத்தின் நினைவு தான் வருகிறது
இருந்தும் நீ வாழவேண்டுமென
மனம் வாழ்த்துகிறது- உன்
நினைவுகளை வலியோடு சுமந்தபடியே....

No comments:

Post a Comment