Labels


என் முடிவும்.....நீதான்!

என் முடிவும்.....நீதான்! 
காதலுக்கு, பொருள் தந்தவள்.....நீதான்,-என் 
காதலைப் பொருட்படுத்தாதவளும்.....நீதான்! 

பார்க்கதூண்டியவள்........நீதான், -எனை 
பாராமல்,கொள்பவளும்........நீதான்! 

பேசத் தூண்டியவள்...... .நீதான், -என்னுடன் 
பேசாமல், இருப்பவளும்........ நீதான்! 

நினைகச்செய்தவள்........நீதான்,-என் 
நினைவை, அழித்தவளும்......நீதான்! 

எண்ணத்தில், இருப்பவள்.......நீதான், -எனை 
எண்ணாமல், இருப்பவளும்.......நீதான்! 

மனக்கோட்டைக்கு, காரணம்........நீதான், -அது 
மணல்மேடாக,காரணமும்.....நீதான்! 

கவிதை, எழுத வைத்தவள்.......நீதான், -அதை 
காகிதமாய்,எண்ணியவளும்.......நீதான்! 

ஆசையை,தூண்டியவள்......நீதான்,-என் 
ஆசைக்கு, அணைபோட்டவளும்.........நீதான்! 

மனதை,புரிந்து கொண்டவள்......நீதான்,-என் 
மனதை, மறுப்பவளும்.....நீதான்! 

முதன்,முதலில் என்னுள், பதிந்தவள்.....நீதான்,-என் 
முடிவாக, இருப்பவளும்.........நீதான்!


No comments:

Post a Comment