என் முடிவும்.....நீதான்!
என் முடிவும்.....நீதான்!
காதலுக்கு, பொருள் தந்தவள்.....நீதான்,-என்
காதலைப் பொருட்படுத்தாதவளும்.....நீதான்!
பார்க்கதூண்டியவள்........நீதான், -எனை
பாராமல்,கொள்பவளும்........நீதான்!
பேசத் தூண்டியவள்...... .நீதான், -என்னுடன்
பேசாமல், இருப்பவளும்........ நீதான்!
நினைகச்செய்தவள்........நீதான்,-என்
நினைவை, அழித்தவளும்......நீதான்!
எண்ணத்தில், இருப்பவள்.......நீதான், -எனை
எண்ணாமல், இருப்பவளும்.......நீதான்!
மனக்கோட்டைக்கு, காரணம்........நீதான், -அது
மணல்மேடாக,காரணமும்.....நீதான்!
கவிதை, எழுத வைத்தவள்.......நீதான், -அதை
காகிதமாய்,எண்ணியவளும்.......நீதான்!
ஆசையை,தூண்டியவள்......நீதான்,-என்
ஆசைக்கு, அணைபோட்டவளும்.........நீதான்!
மனதை,புரிந்து கொண்டவள்......நீதான்,-என்
மனதை, மறுப்பவளும்.....நீதான்!
முதன்,முதலில் என்னுள், பதிந்தவள்.....நீதான்,-என்
முடிவாக, இருப்பவளும்.........நீதான்!
No comments:
Post a Comment